ஹதீஸ்கள்
#3238
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ‘‘(வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் முதன் முதலாக யிஹிரா’ குகையில் எனக்கு வேதஅறிவிப்பு கொண்டுவந்தார்.) பிறகு சிறிது காலத்திற்கு (மூன்றாண்டுகளுக்கு) எனக்கு வேதஅறிவிப்பு வருவது நின்று போய்விட்டது. (அந்தக் காலகட்டத்தில் ஒருமுறை) நான் (பாதையில்) நடந்து சென்றுகொண்டிருந்தபோது வானத்திலிருந்து ஒரு சப்தத்தைக் கேட்டேன். அப்போது என் பார்வையை வானத்தை நோக்கி உயர்த்தினேன். அங்கே யிஹிரா’ குகையில் என்னிடம் வந்த அதே வானவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே (இருந்த பிரமாண்டமான) ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அவரைக் கண்டு நான் பீதிக்குள்ளாகிவிட்டேன். அதையடுத்து (மூர்ச்சையுற்றுத்) தரையில் விழுந்துவிட்டேன். பிறகு, (மயக்கம் தெளிந்தவுடன்) என் வீட்டாரிடம் சென்று, ‘‘எனக்குப் போர்த்துங்கள். எனக்குப் போர்த்துங்கள்” என்று (நடுக்கத்துடன்) கூறினேன். அவ்வாறே போர்வை போர்த்தப்பட்டது. அப்போது உயர்ந்தோன் அல்லாஹ், ‘‘(போர்வை) போர்த்திக்கொண்டிருப்பவரே! எழுந்திருப்பீராக! பிறகு (அல்லாஹ்வின் தண்டனை குறித்து மக்களை) அச்சுறுத்தி எச்சரிப்பீராக! உம்முடைய இறைவனின் பெருமையை எடுத்துரைப்பீராக! உம்முடைய ஆடைகளைத் தூய்மையாக வைத்திருப்பீராக! அசுத்தத்தை வெறுத்து ஒதுக்கிவிடுவீராக!” எனும் (74:1லி5) வசனங் களை அருளினான். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.47 அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூசலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: இங்கு ‘அசுத்தம்’ (ருஜ்ஸ்) என்பது சிலைகளைக் குறிக்கும். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3238
- Book Index
- 49
Grades
- -