ஹதீஸ்கள்
#3235
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘அப்படியென்றால், யிபிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளைப்போல் அல்லது அதைவிடச் சமீபமாக இருந்தது’ (53:8,9) எனும் இறைவசனம் எங்கே?” என்று கேட்டேன்.45 அதற்கு அவர்கள், ‘‘அது (குர்ஆனில் ‘அவர் நெருங்கி அருகே வந்தார்’ என்பதில் ‘அவர்’ என்பது) ஜிப்ரீல் (அலை) அவர்களைக் குறிக்கிறது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதரின் உருவில் வருவார்கள். இந்த முறை அவர்கள் வந்தது அவர்களின் உண்மையான உருவம் எதுவோ அந்த உருவத்திலாகும். அதனால்தான் அவர் அடிவானத்தையே அடைத்துக்கொண்டார்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثني محمد بن يوسف، حدثنا ابو اسامة، حدثنا زكرياء بن ابي زايدة، عن ابن الاشوع، عن الشعبي، عن مسروق، قال قلت لعايشة رضى الله عنها فاين قوله {ثم دنا فتدلى * فكان قاب قوسين او ادنى} قالت ذاك جبريل كان ياتيه في صورة الرجل، وانه اتاه هذه المرة في صورته التي هي صورته، فسد الافق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3235
- Book Index
- 46
Grades
- -
