ஹதீஸ்கள்
#3206
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார் கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெளியே வருவார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) அவர் களின் முகம் மாறிவிடும். வானம், மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பான) நிலை அவர்களைவிட்டு நீங்கிவிடும். ஆகவே, (ஒருமுறை) நான் அவர்களுக்கு அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டுவந்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆத் சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்துகொண்டிருப்பதைக் கண்டபோது (தவறாகப் புரிந்துகொண்டு), ‘‘இது நமக்கு மழை பொழிவிக்கும் மேக மாகும்” (46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக்கூடிய) மேகமாகவும் இது இருக்கலாம். எனக்குத் தெரியாது” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا مكي بن ابراهيم، حدثنا ابن جريج، عن عطاء، عن عايشة رضى الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم اذا راى مخيلة في السماء اقبل وادبر ودخل وخرج وتغير وجهه، فاذا امطرت السماء سري عنه، فعرفته عايشة ذلك، فقال النبي صلى الله عليه وسلم " ما ادري لعله كما قال قوم {فلما راوه عارضا مستقبل اوديتهم} ". الاية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3206
- Book Index
- 17
Grades
- -
