ஹதீஸ்கள்
#3203
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரிய கிரகணம் ஏற்பட்ட நாளில் தொழு கைக்காக நின்று யிதக்பீர்’ கூறி நீண்ட நேரம் (குர்ஆனை) ஓதினார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி, ‘‘சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹு” (தன்னைப் புகழ்ந்த வனின் புகழுரையை அல்லாஹ் செவியுற் றான்) என்று கூறினார்கள். அப்படியே நின்று நீண்ட நேரம் (குர்ஆன்) ஓதினார் கள். அது முதல் தடவை ஓதியதைவிடக் குறைவாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். அது முதல் ருகூஐவிடச் சிறியதாக இருந்தது. பிறகு நீண்ட நேரம் சஜ்தா செய்தார்கள். பிறகு அடுத்த ரக்அத்திலும் அவ்வாறே செய்தார்கள். பிறகு சலாம் கொடுத்தார்கள். அதற்குள் (கிரகணம் முடிந்து) சூரியன் வெளிப்பட்டுவிட்டிருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்க ளுக்கு உரையாற்றினார்கள். (அவ்வுரையில்) சூரிய, சந்திர கிரகணங்களைப் பற்றி, ‘‘அவையிரண்டும் அல்லாஹ்வின் சான்று களில் இரு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் எவருடைய பிறப்புக்காக வும் கிரகணம் ஏற்படுவதில்லை. நீங்கள் அவற்றைக் காணும்போது தொழுகைக்கு விரையுங்கள்” என்று சொன்னார்கள்.16 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، قال اخبرني عروة، ان عايشة رضى الله عنها اخبرته ان رسول الله صلى الله عليه وسلم يوم خسفت الشمس قام فكبر وقرا قراءة طويلة، ثم ركع ركوعا طويلا ثم رفع راسه فقال " سمع الله لمن حمده " وقام كما هو، فقرا قراءة طويلة وهى ادنى من القراءة الاولى، ثم ركع ركوعا طويلا وهى ادنى من الركعة الاولى، ثم سجد سجودا طويلا، ثم فعل في الركعة الاخرة مثل ذلك، ثم سلم وقد تجلت الشمس، فخطب الناس، فقال في كسوف الشمس والقمر " انهما ايتان من ايات الله، لا يخسفان لموت احد، ولا لحياته، فاذا رايتموهما فافزعوا الى الصلاة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3203
- Book Index
- 14
Grades
- -
