ஹதீஸ்கள்
#3198
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அர்வா’ என்னும் பெண்மணி, நான் அவருக்கு ஒரு (நிலத்தின்) உரிமையில் குறைவைத்துவிட்டதாகக் கருதி (மதீனா வின் ஆளுநர்) மர்வான் அவர்களிடம் எனக்கெதிராக வழக்குத் தொடுத்தார். (விசாரணையின்போது) நான், ‘‘அவரது உரிமையில் எதையும் நான் குறை வைப்பேனா? யிஎவர் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தின் மேற்பகுதியிலிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி) மறுமை நாளில் மாலையாக மாட்டப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருப்பதாக சாட்சியமளிக்கிறேன்” என்று சொன்னேன்.10 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துர் ரஹ்மான் பின் அபிஸ்ஸினாத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், ‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்” என ஹதீஸ் ஆரம்பமாகிறது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3198
- Book Index
- 9
Grades
- -