ஹதீஸ்கள்
#3195
ஸஹீஹ் அல்-புகாரீ - Beginning of Creation
அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: எனக்கும் சிலருக்குமிடையே ஒரு நிலம் தொடர்பாகத் தகராறு இருந்து வந்தது. நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று அதைப் பற்றிக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அபூசலமாவே! நிலத்தை (எப்படியாவது அடைந்துகொள்ள வேண்டும் என்னும் ஆசையைத்) தவிர்த்துக்கொள்வீராக! ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யியார் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக்கொள்கி றாரோ அவரது கழுத்தில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள்வரை (செல்லும் பகுதி மறுமை நாளில்) மாலையாக மாட்டப்படும்’ எனக் கூறியுள் ளார்கள்” என்று சொன்னார்கள்.7 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، اخبرنا ابن علية، عن علي بن المبارك، حدثنا يحيى بن ابي كثير، عن محمد بن ابراهيم بن الحارث، عن ابي سلمة بن عبد الرحمن، كانت بينه وبين اناس خصومة في ارض، فدخل على عايشة فذكر لها ذلك، فقالت يا ابا سلمة اجتنب الارض، فان رسول الله صلى الله عليه وسلم قال " من ظلم قيد شبر طوقه من سبع ارضين
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Beginning of Creation
- Hadith Index
- #3195
- Book Index
- 6
Grades
- -
