ஹதீஸ்கள்
#3185
ஸஹீஹ் அல்-புகாரீ - Jizyah and Peace Treaties
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருமுறை (கஅபா அருகே) நபி (ஸல்) அவர்கள் (தொழுது) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்துகொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷி இணைவைப்பாளர்கள் இருந்தனர். அப்போது (குறைஷித் தலைவன்) உக்பா பின் அபீமுஐத், நபி (ஸல்) அவர்களை நோக்கி ஒட்டகத்தின் (கர்ப்பத்திலுள்ள) குட்டியை மூடியிருக்கும் சவ்வைக் கொண்டுவந்து, அதை நபி (ஸல்) அவர்களுடைய முதுகின் மீது எறிந்துவிட்டான். நபி (ஸல்) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கள் வரும்வரை (ஸஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தவில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தவுடன் (அந்தக் கழிவை) நபி (ஸல்) அவர்களின் முதுகி லிருந்து அகற்றிவிட்டார்கள். மேலும், அதைச் செய்தவனுக்கெதிராகப் பிரார்த் தனை செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! குறைஷியரில் முக்கியப் பிரமுகர்களை நீ கவனித்துக்கொள்வாயாக!. இறைவா! அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, உக்பா பின் அபீமுஐத், உமய்யா பின் கலஃப் லிஅல்லது உபை பின் கலஃப்லி ஆகியோரை நீ கவனித்துக்கொள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். நான் இவர்களையெல்லாம் பத்ர் போரில் கொல்லப்பட்டுக் கிணற்றில் போடப்பட்டிருக்கக் கண்டேன்; உமய்யா வைத் தவிர லிஅல்லது உபையைத் தவிர. ஏனெனில், அவர் பருமனான மனிதனாக இருந்தார்லி அவரை அவர்கள் (முஸ்லிம் வீரர்கள்) இழுத்துச் சென்றபோது அவர் கிணற்றில் போடப்படுவதற்கு முன்பே அவருடைய மூட்டுகள் துண்டாகி (தனித் தனியாகக் கழன்று)விட்டன.41 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Jizyah and Peace Treaties
- Hadith Index
- #3185
- Book Index
- 27
Grades
- -