ஹதீஸ்கள்
#3184
ஸஹீஹ் அல்-புகாரீ - Jizyah and Peace Treaties
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹுதைபியா ஆண்டில்) நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்கா வினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாட்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் ஆயுதங்களை உறைகளில் இட்டபடிதான் நுழைய வேண்டும் என்றும் அவர்களில் எவரையும் (தமது மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) விதிகளை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் எழுதலானார்கள். அப்போது அவர்கள், ‘‘இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தமாகும்” என்று எழுதினார்கள். மக்காவாசிகள், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்கா வினுள் நுழைய விடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்றுக்கொண்டு) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, யிஇது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம்’ என எழுதுங்கள்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுதான். மேலும், அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதரும் ஆவேன்” என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். ஆகவே, அலீ (ரலி) அவர்களிடம், ‘அல்லாஹ் வின் தூதர் எனும் சொல்லை அழித்துவிடுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்கமாட்டேன்” என்று மறுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்” என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி (ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாட்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும்படி கூறுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். உடனே, அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (புறப்பட வேண்டியதுதான்)” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள்.39 அத்தியாயம் :
حدثنا احمد بن عثمان بن حكيم، حدثنا شريح بن مسلمة، حدثنا ابراهيم بن يوسف بن ابي اسحاق، قال حدثني ابي، عن ابي اسحاق، قال حدثني البراء رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم لما اراد ان يعتمر ارسل الى اهل مكة يستاذنهم ليدخل مكة، فاشترطوا عليه ان لا يقيم بها الا ثلاث ليال، ولا يدخلها الا بجلبان السلاح، ولا يدعو منهم احدا، قال فاخذ يكتب الشرط بينهم علي بن ابي طالب، فكتب هذا ما قاضى عليه محمد رسول الله. فقالوا لو علمنا انك رسول الله لم نمنعك ولبايعناك، ولكن اكتب هذا ما قاضى عليه محمد بن عبد الله. فقال " انا والله محمد بن عبد الله وانا والله رسول الله ". قال وكان لا يكتب قال فقال لعلي " امح رسول الله ". فقال علي والله لا امحاه ابدا. قال " فارنيه ". قال فاراه اياه، فمحاه النبي صلى الله عليه وسلم بيده، فلما دخل ومضى الايام اتوا عليا فقالوا مر صاحبك فليرتحل. فذكر ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال " نعم " ثم ارتحل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Jizyah and Peace Treaties
- Hadith Index
- #3184
- Book Index
- 26
Grades
- -
