ஹதீஸ்கள்
#3182
ஸஹீஹ் அல்-புகாரீ - Jizyah and Peace Treaties
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஸிஃப்பீன் (போரில்) இருந் தோம். அப்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் எழுந்து நின்று சொன்னார் கள்: மக்களே! (யாரையும் போரில் கலந்து கொள்ளாததற்காகக் குற்றம்சாட்டாதீர்கள்.) உங்களை நீங்களே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். ஏனெனில், நாங்கள் ஹுதைபியா உடன்படிக்கையின்போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். போர் புரிவது உசிதமானதென்று நாங்கள் கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் அவர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டோம்.) அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கின்றோம்; அவர்கள் அசத்தியத்தில் இருக்கின்றனர்)” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘போரில் கொலை யுண்டுவிடும்போது நம் வீரர்கள் சொர்க்கத் திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்தி லும் இருப்பார்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் திரும்பிவிடுவதா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்கமாட்டான்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்களிடம் தாம் சொன்னதைப் போன்றே சொன்னார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அவர்கள் அல்லாஹ்வின் தூதர். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று கூறினார்கள். அப்போது (யிஉமக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்துவிட்டோம்’ என்று தொடங்கும்) ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமருக்கு இறுதிவரை ஓதிக்காட்டினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! வெற்றியா அது?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (வெற்றிதான்)” என்று பதிலளித் தார்கள்.37 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا يحيى بن ادم، حدثنا يزيد بن عبد العزيز، عن ابيه، حدثنا حبيب بن ابي ثابت، قال حدثني ابو وايل، قال كنا بصفين فقام سهل بن حنيف فقال ايها الناس اتهموا انفسكم فانا كنا مع رسول الله صلى الله عليه وسلم يوم الحديبية، ولو نرى قتالا لقاتلنا، فجاء عمر بن الخطاب فقال يا رسول الله، السنا على الحق وهم على الباطل فقال " بلى ". فقال اليس قتلانا في الجنة وقتلاهم في النار قال " بلى ". قال فعلى ما نعطي الدنية في ديننا انرجع ولما يحكم الله بيننا وبينهم فقال " ابن الخطاب، اني رسول الله، ولن يضيعني الله ابدا ". فانطلق عمر الى ابي بكر فقال له مثل ما قال للنبي صلى الله عليه وسلم فقال انه رسول الله، ولن يضيعه الله ابدا. فنزلت سورة الفتح، فقراها رسول الله صلى الله عليه وسلم على عمر الى اخرها. فقال عمر يا رسول الله، اوفتح هو قال " نعم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Jizyah and Peace Treaties
- Hadith Index
- #3182
- Book Index
- 24
Grades
- -
