ஹதீஸ்கள்
#3180
ஸஹீஹ் அல்-புகாரீ - Jizyah and Peace Treaties
சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘(இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற மதத்தாரிடமிருந்து) ஒரேயொரு தங்க நாணயத்தையோ பொற்காசையோகூடப் பெற முடியாத காலம் வரும்போது உங்கள் நிலை எப்படியிருக்கும்?” என்று கேட்டார்கள். அப்போது ‘‘அபூஹுரைராவே! அவ்வாறு (ஒரு காலம்) ஏற்படும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுûரா (ரலி) அவர்கள், ‘‘ஆம். அபூஹுரைராவின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! இதை நான் உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டுத்தான் சொல்கிறேன்” என்று பதிலளித்தார்கள். அப்போது மக்கள், ‘‘எதனால் அத்தகைய காலம் ஏற்படும்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் (அடைக் கலப்) பொறுப்பும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (அடைக்கலப்) பொறுப் பும் அவமதிக்கப்படும். (அதாவது முஸ்லிம்கள் ஒப்பந்தப்படி நடக்காமல் நம்பிக்கை மோசடி செய்வார்கள்.) அப்போது அல்லாஹ் பிற மதத்தாரின் உள்ளங்களுக்குத் துணிவைத் தந்து விடுவான். அவர்கள் தங்கள் கரங்களில் இருப்பவற்றைத் தடுத்துக்கொள்வார்கள். (ஜிஸ்யா வரி கட்ட மறுத்துப் போர் புரியவும் துணிந்துவிடுவார்கள்.) அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Jizyah and Peace Treaties
- Hadith Index
- #3180
- Book Index
- 22
Grades
- -