ஹதீஸ்கள்
#3179
ஸஹீஹ் அல்-புகாரீ - Jizyah and Peace Treaties
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆனையும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர வேறெதையும் எழுதிவைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் (இந்த ஏட்டில்), ‘‘மதீனா நகரம் யிஆயிர்’ மலையிலிருந்து இன்ன இடம்வரை புனிதமானதாகும். யார் இங்கு (மார்க்கத்தில்) புதிய (கருத்து அல்லது செயல்பாடு) ஒன்றைத் தோற்றுவிக்கிறாரோ, அல்லது அவருக்கு அடைக்கலம் அளிக்கிறாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவரிட மிருந்து கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படாது. முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும். (அது மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற் குச் சமமானதாகக் கருதப்பட வேண்டியதே யாகும்.) அவர்களில் சாமானியர்கூட அடைக்கலம் தரலாம். ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக் கலத்தை யார் முறிக்கிறாரோ அவர்மீது அல்லாஹ்வுடைய சாபமும் வானவர்களு டைய சாபமும் மற்றும் மக்கள் அனைவரு டைய சாபமும் ஏற்படும். அவரிடமிருந்து கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படாது. விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்(னை விடுதலை செய்த எஜமானர்களான தன்) காப்பாளர்களின் அனுமதியின்றிப் பிறரைத் தன் எஜமானர்களாக ஆக்கிக்கொண்டால், அவன்மீதும் அல்லாஹ்வுடைய சாபமும் வானவர்களுடைய சாபமும் மற்றும் மக்கள் அனை வருடைய சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படாது.35 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن الاعمش، عن ابراهيم التيمي، عن ابيه، عن علي رضى الله عنه قال ما كتبنا عن النبي صلى الله عليه وسلم الا القران، وما في هذه الصحيفة، قال النبي صلى الله عليه وسلم " المدينة حرام ما بين عاير الى كذا، فمن احدث حدثا، او اوى محدثا، فعليه لعنة الله والملايكة والناس اجمعين، لا يقبل منه عدل ولا صرف، وذمة المسلمين واحدة يسعى بها ادناهم. فمن اخفر مسلما فعليه لعنة الله والملايكة والناس اجمعين، لا يقبل منه صرف ولا عدل، ومن والى قوما بغير اذن مواليه فعليه لعنة الله والملايكة والناس اجمعين، لا يقبل منه صرف ولا عدل
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Jizyah and Peace Treaties
- Hadith Index
- #3179
- Book Index
- 21
Grades
- -
