ஹதீஸ்கள்
#3177
ஸஹீஹ் அல்-புகாரீ - Jizyah and Peace Treaties
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை அபூபக்ர் (ரலி) அவர்கள் யியவ்முந் நஹ்ர்’ (துல்ஹிஜ்ஜா பத்தாம் நாள்) அன்று மதீனாவில் பொது அறிவிப்பு கள் செய்பவர்களுடன் (அவர்களில் ஒருவனாக) அனுப்பினார்கள்.32 (அவர்கள் செய்யச்சொன்ன பொது அறிவிப்பு இதுதான்:) இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது. இறையில்லத்தை (கஅபாவை) நிர்வாணமாக எவரும் தவாஃப் செய்யக் கூடாது. மேலும், யிஹஜ்ஜுல் அக்பர்’ (பெரிய ஹஜ்) உடைய நாள் என்பது இந்த யியவ்முந் நஹ்ர்’ (துல்ஹிஜ்ஜா பத்தாம் நாள்)தான். இது, யிபெரிய ஹஜ்’ என்று அழைக்கப்பட்டதற்குக் காரணம் மக்கள் (உம்ராவை) யிசிறிய ஹஜ்’ என்று அழைத்ததேயாகும். அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த ஆண்டில் (இணைவைக்கும்) மக்களிடம் (இஸ்லாமிய அரசு செய்துகொண்ட) ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதாக அறிவித்துவிட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் யிவிடைபெறும் ஹஜ்’ செய்த ஆண்டில் இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யவில்லை.33 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، اخبرنا حميد بن عبد الرحمن، ان ابا هريرة، قال بعثني ابو بكر رضى الله عنه فيمن يوذن يوم النحر بمنى لا يحج بعد العام مشرك، ولا يطوف بالبيت عريان. ويوم الحج الاكبر يوم النحر، وانما قيل الاكبر من اجل قول الناس الحج الاصغر. فنبذ ابو بكر الى الناس في ذلك العام، فلم يحج عام حجة الوداع الذي حج فيه النبي صلى الله عليه وسلم مشرك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Jizyah and Peace Treaties
- Hadith Index
- #3177
- Book Index
- 19
Grades
- -
