ஹதீஸ்கள்
#3149
ஸஹீஹ் அல்-புகாரீ - One-fifth of Booty to the Cause of Allah
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் நடந்து சென்றுகொண்டிருந்தேன். அப்போது அவர்கள் கரை தடித்த நஜ்ரான் (யமன்) தேசத்து சால்வை ஒன்றைப் போர்த்தியிருந் தார்கள். அப்போது கிராமவாசி ஒருவர் அவர்களை நெருங்கி, அந்தச் சால்வையை வேகமாக இழுத்தார். எந்த அளவுக்கென்றால் அந்தக் கிராமவாசி வேகமாக இழுத்ததால் சால்வையின் ஓரப்பகுதி நபி (ஸல்) அவர்களது தோளின் ஒரு மூலையில் அடையாளம் பதித்திருந்ததை நான் கண்டேன். பிறகு அவர் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘தங்களிடமுள்ள அல்லாஹ்வின் செல்வத் திலிருந்து எனக்குக் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்துவிட்டு, பிறகு அவருக்குக் கொடுக்கும்படி உத்தர விட்டார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- One-fifth of Booty to the Cause of Allah
- Hadith Index
- #3149
- Book Index
- 57
Grades
- -