ஹதீஸ்கள்
#3148
ஸஹீஹ் அல்-புகாரீ - One-fifth of Booty to the Cause of Allah
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்களுடன் மக்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தார்கள். அப்போது கிராமவாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பிடித்துக்கொண்டு (போரில் கிடைத்த பொருட்களிலிருந்து தங்களுக்குக் கொடுக்கும்படி) கேட்கலானார் கள். இறுதியில், அவர்களை (சூழ்ந்து கொண்டு நெருக்கியபடி) ஒரு கருவேல மரத்தின் அருகே தள்ளிக்கொண்டு சென்று அவர்களின் மேல்துண்டைப் பறித்துக் கொண்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘எனக்கு என் மேல் துண்டைக் கொடுத்துவிடுங்கள். இந்த (கருவேல மரத்தின்) முட்கள் அளவுக்கு ஒட்டகங்கள் (என்னிடம்) இருந்தாலும் அவற்றை நான் உங்களிடையே பங்கிட்டு விடுவேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவோ, பொய் சொல்பவனாகவோ, கோழையாகவோ பார்க்கமாட்டீர்கள்” என்று சொன்னார்கள்.65 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- One-fifth of Booty to the Cause of Allah
- Hadith Index
- #3148
- Book Index
- 56
Grades
- -