ஹதீஸ்கள்
#3136
ஸஹீஹ் அல்-புகாரீ - One-fifth of Booty to the Cause of Allah
அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டுவிட்ட செய்தி நாங்கள் யமன் நாட்டில் இருந்தபோது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரு சகோதரர்களும் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரு சகோதரர்களில் ஒருவர் அபூபுர்தா அவர்களும் மற்றொருவர் அபூருஹ்ம் அவர்களும் ஆவர். நான்தான் அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன். லிஞீஎன் குலத்தாரில் ஐம்பதுக்கு மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம்’ என்றோ, ஐம்பத்திரண்டு பேர்களுடன் அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன் சேர்ந்து சென்றோம்’ என்றோ என் தந்தை அபூமூசா (ரலி) அவர்கள் சொன்னார்கள் என நான் நினைக்கிறேன்” என அறிவிப்பாளர் அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்லி நாங்கள் ஒரு கப்பலில் ஏறிப் பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் மன்னர் நஜாஷீயிடம் எங்களை இறக்கிவிட்டது. அவரிடம் (அபிசீனியாவில்) ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களையும் அவர்களுடைய சகாக்களையும் தற்செயலாகச் சந்தித்தோம். ஜஅஃபர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை இங்கு அனுப்பி (இங்கேயே) தங்கும்படி உத்தரவிட்டுள்ளார்கள். ஆகவே, நீங்களும் எங்களுடன் (இங் கேயே) தங்குங்கள்” என்று கூறினார்கள். ஆகவே, நாங்கள் அவருடன் தங்கி னோம். இறுதியில் நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) சென்றோம். நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது அவர்களைச் சென்றடைந்தோம். உடனே அவர்கள் (கைபர் போரில் கிடைத்த பொருட்களில்) எங்களுக்கும் பங்கு கொடுத்தார்கள். லிஅல்லது எங்களுக்கும் அதிலிருந்து கொடுத்தார்கள்லி கைபர் வெற்றியில் கலந்துகொள்ளாத எவருக்கும் அதிலிருந்து எதையும் நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுத் தரவில்லை. தம்முடன் (அதில்) கலந்துகொண்டவர் களுக்கு மட்டும்தான் பங்கிட்டுத் தந்தார் கள். ஆனால், எங்கள் கப்பலில் வந்தவர் களுக்கு மட்டும் ஜஅஃபர் (ரலி) அவர்களு டனும் அவர்களுடைய சகாக்களுக்களு டனும் (சேர்த்துப்) பங்கிட்டுத் தந்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- One-fifth of Booty to the Cause of Allah
- Hadith Index
- #3136
- Book Index
- 44
Grades
- -