ஹதீஸ்கள்
#3100
ஸஹீஹ் அல்-புகாரீ - One-fifth of Booty to the Cause of Allah
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என் வீட்டில் எனது முறைக்குரிய நாளில் (வந்திருந்தபோது) என் தொண்டைக்கும் என் மார்புக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அல்லாஹ் எனது எச்சிலையும் அவர்களுடைய எச்சிலையும் ஒன்றுசேர்த்திருந்தான். (எப்படியெனில்) நபி (ஸல்) அவர்கள் (கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் என் சகோதரர்) அப்துர் ரஹ்மான், பல் துலக்கும் குச்சியைக் கொண்டுவந்தார். நபி (ஸல்) அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பலவீனமாக இருந்தார்கள். ஆகவே, நான் அந்தக் குச்சியை எடுத்து மென்று பிறகு அதனால் நபி (ஸல்) அவர்களுக்குப் பல் துலக்கிவிட்டேன்.15 அத்தியாயம் :
حدثنا ابن ابي مريم، حدثنا نافع، سمعت ابن ابي مليكة، قال قالت عايشة رضى الله عنها توفي النبي صلى الله عليه وسلم في بيتي، وفي نوبتي، وبين سحري ونحري، وجمع الله بين ريقي وريقه. قالت دخل عبد الرحمن بسواك، فضعف النبي صلى الله عليه وسلم عنه، فاخذته فمضغته ثم سننته به
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- One-fifth of Booty to the Cause of Allah
- Hadith Index
- #3100
- Book Index
- 9
Grades
- -
