ஹதீஸ்கள்
#3074
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் பயணச் சுமை களுக்குக் காவலராக ‘கிர்கிரா’ எனப்படும் மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ஒருநாள்) இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர் நரகத்தில் நுழைவார்” என்று கூறினார்கள். (இதைக் கேட்டு) நபித்தோழர்கள் அவரைப் பார்ப்பதற்காகச் சென்றனர். அங்கு அவர் மோசடி செய்து (திருடி) எடுத்துவைத்திருந்த மேலங்கி ஒன்றைக் கண்டார்கள்.193 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: (என் ஆசிரியர்) முஹம்மத் பின் சலாம் (ரஹ்) அவர்கள், (‘கிர்கிரா’வை) யிகர்கரா’ என்று உச்சரிக்க வேண்டும் என்று கூறினார்கள். அது இவ்வாறும் உச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن عمرو، عن سالم بن ابي الجعد، عن عبد الله بن عمرو، قال كان على ثقل النبي صلى الله عليه وسلم رجل يقال له كركرة فمات، فقال رسول الله صلى الله عليه وسلم " هو في النار ". فذهبوا ينظرون اليه فوجدوا عباءة قد غلها. قال ابو عبد الله قال ابن سلام كركرة، يعني بفتح الكاف، وهو مضبوط كذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3074
- Book Index
- 279
Grades
- -
