ஹதீஸ்கள்
#3073
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று, போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத் தார்கள். அப்போது பின்வருமாறு கூறி னார்கள்: ‘‘மறுமை நாளில் தமது கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்துகொண்டு வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்) அப்போது நான், ‘‘உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்’ என்று கூறிவிடுவேன். இவ்வாறே, (மறுமை நாளில்) தமது கழுத்தில் கத்திக்கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்” என்று கூறிவிடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் பொன் அல்லது வெள்ளியைச் சுமந்து கொண்டு வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்க ளில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகத்தி லேயே) சொல்லிவிட்டேன்” என்று கூறி விடுவேன். அல்லது அசைகின்ற எந்தப் பொருளையேனும் தமது கழுத்தில் சுமந்து கொண்டு வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்க ளில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்” என்று கூறி விடுவேன்.191 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن ابي حيان، قال حدثني ابو زرعة، قال حدثني ابو هريرة رضى الله عنه قال قام فينا النبي صلى الله عليه وسلم فذكر الغلول فعظمه وعظم امره قال " لا الفين احدكم يوم القيامة على رقبته شاة لها ثغاء على رقبته فرس له حمحمة يقول يا رسول الله، اغثني. فاقول لا املك لك شييا، قد ابلغتك. وعلى رقبته بعير له رغاء، يقول يا رسول الله اغثني. فاقول لا املك لك شييا، قد ابلغتك. وعلى رقبته صامت، فيقول يا رسول الله اغثني. فاقول لا املك لك شييا، قد ابلغتك. او على رقبته رقاع تخفق، فيقول يا رسول الله اغثني. فاقول لا املك لك شييا، قد ابلغتك ". وقال ايوب عن ابي حيان فرس له حمحمة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3073
- Book Index
- 278
Grades
- -
