ஹதீஸ்கள்
#3071
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (சிறுமியாக இருந்தபோது) என் தந்தையுடன் சென்றேன். அப்போது நான் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(இவள்) நன்றாயிருக் கிறாள். (இவள்) நன்றாயிருக்கிறாள்” என்று சொன்னார்கள். நான் (நபி (ஸல்) அவர் களின் இரு தோள்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையுடன் விளையாடத் தொடங்கினேன். உடனே என் தந்தை என்னை அதட்டினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(குழந்தைதானே!) அவளை (விளையாட) விடுவீராக!” என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்தச் சட்டையை) நீ (பழைய தாக்கிக்) கிழித்து நைந்துபோகச்செய்துவிடு. பிறகும் அதைக் கிழித்து நைந்துபோகச் செய்துவிடு. மீண்டும் அதைக் கிழித்து நைந்துபோகச்செய்துவிடு” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், ‘‘அந்தச் சட்டை, பழுத்துப்போய் மக்களால் பேசப் படும் அளவுக்கு உம்மு காலித் (ரலி) அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்தார்கள்” என்று கூறுகிறார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறிய யிசனா’ (நன்றாயிருக்கிறாள்) என்னும் சொல் அபிசீனிய மொழிச் சொல்லாகும்” என்றும் கூறுகிறார்கள்.189 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3071
- Book Index
- 276
Grades
- -