ஹதீஸ்கள்
#3069
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்கள் (கிழக்கு ரோமானியரைப் போர்க் களத்தில்) சந்தித்தபோது நான் ஒரு குதிரையின் மீது (பயணித்தபடி) இருந்தேன்; அப்போது முஸ்லிம்களின் (படைத்) தலைவராக காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவரை அபூபக்ர் (ரலி) அவர்கள் (தளபதியாக) அனுப்பியிருந் தார்கள். (எனது) அந்தக் குதிரையை எதிரிகள் பிடித்துக்கொண்டனர். எதிரிகள் தோற்கடிக்கப்பட்டபோது காலித் பின் அல் வலீத் (ரலி) அவர்கள் எனது குதிரையைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا زهير، عن موسى بن عقبة، عن نافع، عن ابن عمر رضى الله عنهما انه كان على فرس يوم لقي المسلمون، وامير المسلمين يوميذ خالد بن الوليد، بعثه ابو بكر، فاخذه العدو، فلما هزم العدو رد خالد فرسه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3069
- Book Index
- 274
Grades
- -
