ஹதீஸ்கள்
#3068
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய அடிமையொருவன் தப்பியோடி (கிழக்கு) ரோமானியருடன் சேர்ந்துகொண்டான். காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் அந்த ரோமர்களை வெற்றி கொண்டபோது, அவனை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். (இவ்வாறே) இப்னு உமர் (ரலி) அவர்களின் குதிரையொன்று ஓடிப்போய் (கிழக்கு) ரோமானியர்களிடம் சிக்கிக்கொண்டது. (கிழக்கு) ரோமை காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் வெற்றி கொண்டார்கள். அப்போது அதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: (குதிரை ஓடிப்போனது என்பதைக் குறிக்க மூலத்தில்) யிஆர’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது (அடிப்படையில்), காட்டுக் கழுதையைக் குறிக்கும் ‘அய்ர்’ எனும் சொல்லில் இருந்து வந்தது. இங்கு இது, வெருண்டோடுவதைக் குறிக்கும். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3068
- Book Index
- 273
Grades
- -