ஹதீஸ்கள்
#3067
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னுடைய குதிரை ஒன்று (என்னைக் கீழே வீழ்த்திவிட்டு ஓடிச்) சென்றது. அதை எதிரிகள் பிடித்துக்கொண்டனர். பின்னர், முஸ்லிம்கள் எதிரிகளை வென்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் அது என்னிடம் திருப்பித் தரப்பட்டுவிட்டது. (இவ்வாறே) என்னுடைய அடிமை ஒருவன் தப்பியோடி (கிழக்கு) ரோமானி யருடன் சேர்ந்துகொண்டான். ரோமர்களை முஸ்லிம்கள் வெற்றி கொண்டபோது அந்த அடிமையை காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அத்தியாயம் :
قال ابن نمير حدثنا عبيد الله، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال ذهب فرس له، فاخذه العدو، فظهر عليه المسلمون فرد عليه في زمن رسول الله صلى الله عليه وسلم، وابق عبد له فلحق بالروم، فظهر عليهم المسلمون، فرده عليه خالد بن الوليد بعد النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3067
- Book Index
- 272
Grades
- -
