ஹதீஸ்கள்
#3064
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லிஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதாகக் கூறினர்.183 மேலும், தம் சமுதாயத்தாருக்கெதிராக ஒரு படையனுப்பி உதவுமாறு நபி (ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்ட னர். நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளில் எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் யிகாரீகள்’ (குர்ஆனை ம”ம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்துவந்தோம். அவர்கள் பகலில் விறகு சேகரிப்பார்கள்; இரவில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், யிபிஃரு மஊனா’184 எனுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்று விட்டனர். (செய்தி அறிந்த) நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்கெதிராகப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறைவசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதிவந்தோம். ‘‘நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம்; அவன் எங்களைக் குறித்துத் திருப்தி அடைந்தான்; நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தி அடைந் தோம் என்று எங்கள் சமுதாயத்தாருக்கு எங்களைப் பற்றித் தெரிவித்துவிடுங்கள்” என்பதே அந்த வசனம். பின்னர், இந்த வசனத்தை ஓதுவது (இறைவனாலேயே) ரத்து செய்யப்பட்டு விட்டது.185 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا ابن ابي عدي، وسهل بن يوسف، عن سعيد، عن قتادة، عن انس رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم اتاه رعل وذكوان وعصية وبنو لحيان، فزعموا انهم قد اسلموا، واستمدوه على قومهم، فامدهم النبي صلى الله عليه وسلم بسبعين من الانصار قال انس كنا نسميهم القراء، يحطبون بالنهار ويصلون بالليل، فانطلقوا بهم حتى بلغوا بير معونة غدروا بهم وقتلوهم، فقنت شهرا يدعو على رعل وذكوان وبني لحيان. قال قتادة وحدثنا انس انهم قرءوا بهم قرانا الا بلغوا عنا قومنا بانا قد لقينا ربنا فرضي عنا وارضانا. ثم رفع ذلك بعد
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3064
- Book Index
- 269
Grades
- -
