ஹதீஸ்கள்
#3063
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மூத்தா போரின்போது போர்க்கள நிகழ்ச்சிகளை மதீனாவில் இருந்தபடியே விவரித்து,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.180 உரையில், ‘‘இப்போது (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஸைத் பின் அல் ஹாரிஸா பிடித்துக்கொண்டார். அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அதை ஜஅஃபர் பின் அபீதாலிப் பிடித்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அப்துல்லாஹ் பின் ரவாஹா எடுத்தார். இப்போது அவரும் கொல்லப்பட்டு விட்டார். பிறகு காலித் பின் அல்வலீத் (நமது) உத்தரவு இன்றியே (கொடியை) எடுத்துக் கொண்டுவிட்டார். அல்லாஹ் அவருக்கே வெற்றி வாய்ப்பை அளித்துவிட்டான்” என்று கூறிவிட்டு, ‘‘(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக் காது” என்றோ, ‘‘(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி யளிக்காது” என்றோ சொன்னார்கள்.181 இதைச் சொல்லும்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தன.182 அத்தியாயம் :
حدثنا يعقوب بن ابراهيم، حدثنا ابن علية، عن ايوب، عن حميد بن هلال، عن انس بن مالك رضى الله عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم فقال " اخذ الراية زيد فاصيب، ثم اخذها جعفر فاصيب، ثم اخذها عبد الله بن رواحة فاصيب، ثم اخذها خالد بن الوليد عن غير امرة ففتح عليه، وما يسرني او قال ما يسرهم انهم عندنا ". وقال وان عينيه لتذرفان
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3063
- Book Index
- 268
Grades
- -
