ஹதீஸ்கள்
#3062
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் நாங்கள் (ஹுனைன் அல்லது கைபர் போரில்) கலந்துகொண்டோம். தம்மை முஸ்லிம் என்று கூறிக்கொண்ட ஒரு மனிதரைக் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் நரகவாசி களில் ஒருவர்” என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அம்மனிதர் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்குக் காயம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து, யிஇவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று குறிப்பிட்டீர் களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்துவிட்டார்” என்று கூறப்பட்டது. அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் நரகத்திற்கே செல்வார்” என்று கூறினார்கள். மக்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பைச்) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருக்க, ‘‘அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. இரவு வந்தபோது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன் என்பதற்கு நானே சாட்சியம் கூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் மக்களிடையே, ‘‘முஸ்லிமான ஆன்மாதான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். அல்லாஹ் இந்த மார்க்கத் திற்குப் பாவியான மனிதராலும் வலுவூட்டு கின்றான்” என்று பொதுஅறிவிப்புச் செய்தார்கள்.179 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، ح وحدثني محمود بن غيلان، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن ابن المسيب، عن ابي هريرة رضى الله عنه قال شهدنا مع رسول الله صلى الله عليه وسلم فقال لرجل ممن يدعي الاسلام " هذا من اهل النار ". فلما حضر القتال قاتل الرجل قتالا شديدا، فاصابته جراحة فقيل يا رسول الله، الذي قلت انه من اهل النار فانه قد قاتل اليوم قتالا شديدا وقد مات. فقال النبي صلى الله عليه وسلم " الى النار ". قال فكاد بعض الناس ان يرتاب، فبينما هم على ذلك اذ قيل انه لم يمت، ولكن به جراحا شديدا. فلما كان من الليل لم يصبر على الجراح، فقتل نفسه، فاخبر النبي صلى الله عليه وسلم بذلك فقال " الله اكبر، اشهد اني عبد الله ورسوله ". ثم امر بلالا فنادى بالناس " انه لا يدخل الجنة الا نفس مسلمة، وان الله ليويد هذا الدين بالرجل الفاجر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3062
- Book Index
- 267
Grades
- -
