ஹதீஸ்கள்
#3060
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘மக்களில் இஸ்லாத்தை மொழிந்தவர்களின் பெயர்களை எனக்காக (கணக் கெடுத்து)ப் பதிவு செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.176 நாங்கள் அவர்களுக்காக ஆயிரத்து ஐநூறு பேரின் பெயர்களை எழுதினோம். அப்போது நாங்கள், ‘‘நாம் ஆயிரத்து ஐநூறு பேர் இருக்க (எதிரிகளுக்கு) நாம் பயப்படுவதா?” என்று கேட்டோம். (ஆனால், பிற்காலத்தில்) நாங்கள் அச்சப் பட்டுக்கொண்டு தனியாகத் தொழுமளவுக்கு சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்ததை நான் பார்த்திருக்கிறேன். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்தான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘(நாங்கள் கணக்கெடுத்தபோது) ஐநூறு பேரைக் கண்டோம்” என்று காணப்படு கிறது. ஆபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘அறுநூறு முதல் எழுநூறு வரை’ என்று இடம்பெற்றுள்ளது.177 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن الاعمش، عن ابي وايل، عن حذيفة رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " اكتبوا لي من تلفظ بالاسلام من الناس ". فكتبنا له الفا وخمسماية رجل، فقلنا نخاف ونحن الف وخمسماية فلقد رايتنا ابتلينا حتى ان الرجل ليصلي وحده وهو خايف. حدثنا عبدان، عن ابي حمزة، عن الاعمش، فوجدناهم خمسماية. قال ابو معاوية ما بين ستماية الى سبعماية
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3060
- Book Index
- 265
Grades
- -
