ஹதீஸ்கள்
#3059
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
உமர் (ரலி) அவர்களின் (முன் னாள்) அடிமை அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், (ஸகாத் கால்நடைகளின்) பிரத்யேக மேய்ச்சல் நிலம் ஒன்றுக்கு யிஹுû” எனப்படும் தம் அடிமை ஒருவரை (காவலராக) நியமித்தார்கள். அப்போது (அவரிடம் பின்வருமாறு) கூறினார்கள்: ஹுனையே! உன் கையை முஸ்லிம் களுக்கு அநீதியிழைப்பதிலிருந்து காத்துக் கொள். அநீதியிழைக்கப்பட்டவரின் சாபப் பிரார்த்தனையை அஞ்சு. ஏனெனில், அநீதியிழைக்கப்பட்டவரின் பிரார்த்தனை (அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாகும். சிறு ஒட்டக மந்தைகளையும் சிறு ஆட்டு மந்தைகளையும் ஓட்டி வருபவர்கள் (மேய்ச்சல் நிலத்திற்குள்) நுழைய அனுமதியளி. (செல்வந்தர்களான) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) ஆகியோரின் கால்நடைகளைக் குறித்து எச்சரிக்கையாய் இரு. (அவற்றை உள்ளே நுழைய விடாதே.) ஏனெனில், அவ்விருவரின் கால்நடைகளும் (தீனி கிடைக்காமல்) அழிந்து போய்விட்டால் அவர்களிருவரும் (தம் பிழைப்பிற்குத் தம்) பேரீச்சந் தோட்டங்களையும் விளைநிலங்களையும் பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால், சிறிய ஒட்டக மந்தைகளையும் சிறிய ஆட்டு மந்தைகளையும் வைத்திருப்பவர்கள் தங்கள் கால்நடைகள் (தீனி கிடைக்காமல்) அழிந்துபோய் விட்டால் (கலீஃபாவான) என்னிடம் தம் பிள்ளை குட்டிகளை அழைத்துக்கொண்டு வந்து, ‘‘இறைநம்பிக்கையாளரின் தலைவரே! (இறைநம்பிக்கையாளரின் தலைவரே!) என்று அரற்றுவார்கள். அவர்களை (இதே நிலையில்) நான் விட்டுவிட முடியுமா? உனக்குத் தந்தை இல்லாமல் போக! (அவர்களை நான் விட்டுவிட்டால், பொற்காசுகளையும் வெள்ளிக்காசுகளையும்தான் அவர்களுக்கு நான் கொடுக்க வேண்டிவரும்.) ஆனால், (முஸ்லிம்களின் பொதுநிதியிலிருந்து) தங்கத்தையும் வெள்ளியையும் (அவர்களுக்குத் தருவதை)விட (அரசின் பிரத்யேக மேய்ச்சல் நிலத்திலிருந்து) தண்ணீரையும் புற்பூண்டுகளையும் தருவதே எனக்கு எளிதானதாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! (இவர்களின் பகுதியில் மேய்ச்சலுக்கு நிலம் ஒதுக்கிய தால்) இவர்களுக்கு நான் அநீதியிழைத்து விட்டதாக இவர்கள் கருதுகிறார்கள். இது இவர்களின் நாடு. இதற்காக இவர்கள் அறியாமைக் காலத்தில் போரிட்டிருக் கிறார்கள்; இஸ்லாத்தில் இணையும்போது இதனுடன்தான் இணைந்துள்ளார்கள். என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! இறைவழியில் (போரிடுவோரை) நான் ஏற்றியனுப்ப வேண்டிய (கால்நடைச்) செல்வம் மட்டும் தேவையில்லையென்றால் இவர்களுடைய நாட்டிலிருந்து ஓர் அங்குலத்தைக்கூட (கையகப்படுத்தி) பிரத்யேக மேய்ச்சல் நிலமாக நான் ஆக்கியிருக்கமாட்டேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3059
- Book Index
- 264
Grades
- -