ஹதீஸ்கள்
#3058
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜில் இருந்தபோது, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் நாளை (மக்காவில்) எங்கு தங்குகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(அபூதாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுச்சென்றுள்ளாரா?”174 என்று கேட் டார்கள். பிறகு, ‘‘நாளை நாம் யிபனூ கினானா’ பள்ளத்தாக்கான ‘அல்முஹஸ்ஸப்’ எனும் இடத்தில் தங்குவோம். அங்குதான், குறைஷியர் இறைமறுப்பில் நிலைத்திருப் போம் எனச் சங்கல்பம் ஏற்றனர்” என்று கூறினார்கள். பனூ கினானா குலத்தார் குறைஷியரிடம் பனூ ஹாஷிம் கிளையாருக்கு எதிராக, ‘‘அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக்கொள்ளமாட்டோம்; அவர்களுக்குப் புகலிடம் அளிக்கவும்மாட்டோம்” என்று ஒப்பந்தம் செய்திருந் ததையே நபி (ஸல்) அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்.175 இங்கு யிபள்ளத்தாக்கு’ என்பதைக் குறிக்க யிகைஃப்’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது லி என அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمود، اخبرنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن علي بن حسين، عن عمرو بن عثمان بن عفان، عن اسامة بن زيد، قال قلت يا رسول الله، اين تنزل غدا في حجته. قال " وهل ترك لنا عقيل منزلا ". ثم قال "نحن نازلون غدا بخيف بني كنانة المحصب، حيث قاسمت قريش على الكفر ". وذلك ان بني كنانة حالفت قريشا على بني هاشم ان لا يبايعوهم ولا ييووهم. قال الزهري والخيف الوادي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3058
- Book Index
- 263
Grades
- -
