ஹதீஸ்கள்
#3054
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் கெட்டியான பட்டு அங்கி ஒன்று சந்தையில் விற்கப் படுவதைக் கண்டார்கள் அதை (வாங்கி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! இந்த அங்கியை விலைக்கு வாங்கி, பெருநாளின்போதும் தூதுக்குழுக்கள் வருகை தரும்போதும் இதனால் (உங்களை) அலங்கரித்துக்கொள்ளுங்கள்” என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்களின் ஆடையாகும்” லிஅல்லது ‘‘(மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்கள்தான் இதை அணிவார்கள்”லி என்று சொன்னார்கள். அல்லாஹ் நாடிய (சிறிது) காலம் கழிந் தது. நபி (ஸல்) அவர்கள் அலங்காரப் பட்டு அங்கி ஒன்றை உமர் (ரலி) அவர்களுக்கு அனுப்பிவைத்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். ‘‘அல்லாஹ்வின் தூதரே! இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாத வருடைய ஆடையாகும்; லிஅல்லது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர் தான் இதை அணிவார்’லி என்று கூறினீர் கள். பிறகு, இதையே எனக்கு அனுப்பி வைத்திருக்கிறீர்களே!” என்று கேட் டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இதை நீங்கள் விற்றுவிடுவீர்கள்; அல்லது உங்கள் தேவை எதையேனும் இதைக் கொண்டு நிறைவேற்றிக்கொள்வீர்கள் (என்பதற்காகவே இதை நான் உங்களுக்கு அனுப்பிவைத்தேன்)” என்று கூறினார்கள்.167 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3054
- Book Index
- 260
Grades
- -