ஹதீஸ்கள்
#3043
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: (யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (கோட்டையிலிருந்து இறங்கி வந்து) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சஅத் (ரலி) அவர்களை அழைத்து வரும் படி ஆளனுப்பினார்கள். லிசஅத் (ரலி) அவர்கள் அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில்தான் (அகழ்ப் போரில் காயமடைந்து) இருந்தார்கள்லி அவர்கள் ஒரு கழுதையின் மீதமர்ந்து வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவரை நோக்கி எழுந்து செல்லுங்கள்” என்று (அன்சாரிகளிடம்) கூறினார்கள். சஅத் (ரலி) அவர்கள் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகே அமர்ந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர்கள் உங்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளச் சம்மதித்து (இறங்கி) வந்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள். சஅத் (ரலி) அவர்கள், ‘‘அப்படியென்றால் நான் அவர்களில் உள்ள போர் வீரர்களைக் கொன்றுவிட வேண்டுமென்றும் பெண்களையும் குழந்தை களையும் போர்க் கைதிகளாக ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றும் தீர்ப்பளிக் கின்றேன்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்பையே இவர்கள் விஷயத்தில் அளித்திருக்கிறீர்கள்” என்றார்கள்.152 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن سعد بن ابراهيم، عن ابي امامة هو ابن سهل بن حنيف عن ابي سعيد الخدري رضى الله عنه قال لما نزلت بنو قريظة على حكم سعد هو ابن معاذ بعث رسول الله صلى الله عليه وسلم، وكان قريبا منه، فجاء على حمار، فلما دنا قال رسول الله صلى الله عليه وسلم " قوموا الى سيدكم ". فجاء فجلس الى رسول الله صلى الله عليه وسلم فقال له " ان هولاء نزلوا على حكمك ". قال فاني احكم ان تقتل المقاتلة، وان تسبى الذرية. قال " لقد حكمت فيهم بحكم الملك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3043
- Book Index
- 249
Grades
- -
