ஹதீஸ்கள்
#3020
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஜரீர் பின் அப்திலில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) யிதுல்கலஸா’வின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர் களா?” என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே யியமன் நாட்டு கஅபா’ என்றழைக்கப்பட்டுவந்த ஆலயமாக இருந்தது.133 நான் ‘அஹ்மஸ்’ குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் (சிறந்த) குதிரை வீரர்களாக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, ‘‘இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப் பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள். பிறகு நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி (ஸல்) அவர்களி டம், ‘‘உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப்போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத்தான் உங்களிடம் வந்திருக்கின்றேன்” என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அஹ்மஸ்’ குலத்தாருக்கும் அவர்களுடைய குதிரைப் படை வீரர்களுக்கும் வளம் வழங்குமாறு ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3020
- Book Index
- 229
Grades
- -