ஹதீஸ்கள்
#3018
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: யிஉக்ல்’ குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது.131 அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்ப நிலை ஒத்துக்கொள்ளவில்லை. ஆகவே அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை” என்று பதிலளித்தார்கள். உடனே (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்) உடல் நலம்பெற்றுத் தெளிவானார்கள். பின்னர் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டார்கள்; இஸ்லாத்தை ஏற்றபின் நிராகரித்து விட்டார்கள். ஒருவர் அபயக் குரல் எழுப்பியவாறு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள் யிஉக்ல்’ குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பிவைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்) கொண்டுவரப்பட்டனர். அவர்களின் கைகளையும் கால்களையும் நபியவர்கள் துண்டித்தார்கள். பிறகு ஆணிகளைக் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டுவரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களின் கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள்; அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ எனுமிடத்தில் எறிந்துவிட்டார் கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும்வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை. அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அவர்கள் (உக்ல் அல்லது உரைனா குலத்தார்) கொலை செய்தார்கள்; திருடி னார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டார்கள்; பூமியில் குழப்பத்தை விளைவிக்க முயன்றார்கள். (அதனால்தான், அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு கொடிய தண்டனையை அளிக்க நேர்ந்தது.)132 அத்தியாயம் :
حدثنا معلى بن اسد، حدثنا وهيب، عن ايوب، عن ابي قلابة، عن انس بن مالك رضى الله عنه ان رهطا، من عكل ثمانية قدموا على النبي صلى الله عليه وسلم فاجتووا المدينة فقالوا يا رسول الله، ابغنا رسلا. قال " ما اجد لكم الا ان تلحقوا بالذود ". فانطلقوا فشربوا من ابوالها والبانها حتى صحوا وسمنوا، وقتلوا الراعي، واستاقوا الذود، وكفروا بعد اسلامهم، فاتى الصريخ النبي صلى الله عليه وسلم، فبعث الطلب، فما ترجل النهار حتى اتي بهم، فقطع ايديهم وارجلهم، ثم امر بمسامير فاحميت فكحلهم بها، وطرحهم بالحرة، يستسقون فما يسقون حتى ماتوا. قال ابو قلابة قتلوا وسرقوا وحاربوا الله ورسوله صلى الله عليه وسلم وسعوا في الارض فسادا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3018
- Book Index
- 227
Grades
- -
