ஹதீஸ்கள்
#3012
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அப்வா’ அல்லது யிவத்தான்’ எனுமிடத் தில் நபி (ஸல்) அவர்கள் என் அருகில் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது, இணைவைப்போரான எதிரி நாட்டினரின் பெண்களும் குழந்தைகளும் (போரில் சிக்கிச்) சேதமடையும் (வாய்ப்பு உண்டு என்னும்) பட்சத்தில் அவர்கள்மீது இரவு நேரத்தில் தாக்குதல் நடத்தலாமா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘அவர்களும் (எதிரிகளான) அவர்களைச் சேர்ந்தவர்களே” என்று பதிலளித்தார்கள்.126 மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘‘(பிரத் யேகமான) மேய்ச்சல் நிலம் (வைத்துக் கொள்ளும் உரிமை) அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் தவிர வேறெவருக்கும் இல்லை” என்று கூற நான் கேட்டிருக் கிறேன். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3012
- Book Index
- 221
Grades
- -