ஹதீஸ்கள்
#3011
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மூவருக்கு இரட்டை நன்மைகள் அளிக்கப்படும். அவர்கள்: 1. ஒருவரிடம் அடிமைப் பெண் இருந்தாள். அவளுக்கு அவர் கல்வி கற்பித்தார்; அதையும் செம்மையாகச் செய்தார்; அவளுக்கு ஒழுக்கம் கற்பித்தார். அதையும் செய்மையாகச் செய்தார். பிறகு அவளை (விடுதலை செய்து) தாமே மணமுடித்துக்கொண்டார். அவருக்கு இரட்டை நன்மைகள் கிடைக்கும். 2. வேதக்காரர்களில் (ஏக இறையை) நம்பியவர். அவர் (தம்) இறைத்தூதரை நம்பினார்; பிறகு (இறுதித் தூதரான முஹம்மத்) நபி (ஸல்) அவர்களையும் நம்பினார். அவருக்கும் இரட்டை நன்மை கள் கிடைக்கும். 3. இறைவனின் கடமையையும் நிறைவேற்றி, தன் எஜமானுக்கும் நலம் நாடுகின்ற அடிமை. அறிவிப்பாளர் ஸாலிஹ் பின் ஹை (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த நபிமொழியை எனக்கு அறி வித்த) ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘(கட்டணம் ஏதுமின்றி இதை நான் உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். இதைவிட சின்ன விஷயங்களை அறிந்துகொள்ள சிலர் மதீனாவரைகூட பயணம் சென்றுகொண்டி ருந்தார்கள்” என்று கூறினார்கள்.125 அத்தியாயம் :)
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان بن عيينة، حدثنا صالح بن حى ابو حسن، قال سمعت الشعبي، يقول حدثني ابو بردة، انه سمع اباه، عن النبي صلى الله عليه وسلم قال " ثلاثة يوتون اجرهم مرتين الرجل تكون له الامة فيعلمها فيحسن تعليمها، ويودبها فيحسن ادبها، ثم يعتقها فيتزوجها، فله اجران، ومومن اهل الكتاب الذي كان مومنا، ثم امن بالنبي صلى الله عليه وسلم فله اجران، والعبد الذي يودي حق الله وينصح لسيده ". ثم قال الشعبي واعطيتكها بغير شىء وقد كان الرجل يرحل في اهون منها الى المدينة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3011
- Book Index
- 220
Grades
- -
