ஹதீஸ்கள்
#3009
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது, ‘‘நாளை நான் ஒரு மனிதரிடம் (இஸ்லாமியச் சேனையின்) கொடியைக் கொடுப்பேன். அவருடைய கரங்களில் அல்லாஹ் வெற்றி அளிப்பான். அவர் அல்லாஹ்வையும் அவன் தூதரையும் நேசிக்கிறார்; அவரை அல்லாஹ்வும் அவன் தூதரும் நேசிக்கிறார்கள்” என்று சொன்னார்கள். அந்தக் கொடி தம்மில் யாரிடம் தரப் படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவைக் கழித்தனர். மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே கொடுக்கப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டவர்களாக வந்தனர். அப்போது ‘‘அலீ எங்கே?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ‘‘அலீ அவர்களுக்குக் கண் வலி” என்று சொல்லப்பட்டது. ஆகவே, (அலீ அவர்களை அழைத்து வரச்செய்து) நபி (ஸல்) அவர்கள், அலீ அவர்களின் இரு கண்களிலும் தமது எச்சிலை உமிழ்ந்து அவர்களுக்காக துஆ செய்தார்கள். உடனே அலீ அவர்கள் (அதற்குமுன்) தமக்கு வலியே இருந்ததில்லை என்பதைப் போன்று குணமடைந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி)அவர்களிடம் கொடியைக் கொடுத்தார்கள். ‘‘அவர்கள் நம்மைப் போன்று (முஸ்லிம் களாக) ஆகும்வரை நான் அவர்களுடன் போர் புரிவேன்” என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(அலீயே!) நிதானத்துடன் சென்று அவர்களின் களத்தில் இறங்குங்கள். பிறகு அவர்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்படி அழையுங்கள். (இஸ்லாத்தை ஏற்பதால்) அவர்கள்மீது கடமையாகின்றவற்றை அவர்களுக்குத் தெரிவியுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் அல்லாஹ் ஒருவருக்கு நல்வழி அளிப்பதானது, (அரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் உமக்குக் கிடைப்பதைவிடச் சிறந்ததாகும்” என்று கூறினார்கள்.123 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3009
- Book Index
- 218
Grades
- -