ஹதீஸ்கள்
#3008
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பத்ர் போரின்போது போர்க் கைதிகள் (கைது செய்யப்பட்டுக்) கொண்டுவரப் பட்டனர். (அப்போது எதிரணியில் இருந்த நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் அவர்களும் (கைதி யாகக்) கொண்டுவரப்பட்டார்கள். அவரிடம் அணிவதற்கு ஆடை எதுவும் இல்லாதிருந் தது. நபி (ஸல்) அவர்கள் ஒரு மேலங்கி யைத் தேடினார்கள். அப்போது (நயவஞ்ச கர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபையின் மேலங்கி அவர்களுக்கு அளவில் பொருத்தமாக அமைந்திருப் பதை மக்கள் கண்டார்கள். அதையே அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அணிவித் தார்கள். இதனால்தான், அப்துல்லாஹ் பின் உபை (இறந்த பின்பு அவரு)க்கு நபி (ஸல்) அவர்கள் தமது மேலங்கியைக் கழற்றி அணிவித்தார்கள். ‘‘அப்துல்லாஹ் பின் உபை, நபி (ஸல்) அவர்களுக்கு இந்த வகையில் கை கொடுத்தார். நபி (ஸல்) அவர்கள் அதற்குப் பிரதியுபகாரம் செய்ய விரும்பினார்கள்” என்று அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3008
- Book Index
- 217
Grades
- -