ஹதீஸ்கள்
#2984
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்யச் சென்றபோது) நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! தங்கள் தோழர்கள் எல்லாரும் ஹஜ் மற்றும் உம்ராவின் நற்பலனைப் பெற்றுத் திரும்புகிறார்கள். ஆனால், நானோ ஹஜ்ஜைவிட அதிகமாக (உம்ரா எதையும்) செய்யவில்லையே!” என்று (ஏக்கத்துடன்) கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘நீ (உம்ரா செய்யப்) போ! உன்னை (உன் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (வாகனத்தில் தமக்குப்) பின்னால் உட்கார வைத்துக் கொள்ளட்டும்” என்று கூறிவிட்டு, அப்துர் ரஹ்மான் அவர்களை யிதன்யீம்’ எனுமிடத்திலிருந்து என்னை உம்ராவுக்கு அழைத்துச் செல்லும்படி கட்டளை யிட்டார்கள். நான் (உம்ராவை நிறைவேற்றிவிட்டுத் திரும்பி) வரும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை எதிர் பார்த்து மக்காவின் மேற்பகுதியில் காத்தி ருந்தார்கள்.108 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2984
- Book Index
- 193
Grades
- -