ஹதீஸ்கள்
#2983
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் முந்நூறு பேர் எங்கள் பயண உணவை எங்கள் பிடரிகளில் சுமந்து கொண்டு (அறப்போருக்காகப்) புறப்பட் டோம். எங்கள் பயண உணவு குறைய லாயிற்று. எந்த அளவுக்கென்றால் நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பேரீச்சம் பழம் மட்டுமே உண்ண வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டோம். லிஇதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறி வித்துக்கொண்டிருந்தபோது ஒரு மனிதர், ‘‘அபூஅப்தில்லாஹ்வே! (ஒருநாள் முழுவ தற்கும்) ஒரு பேரீச்சம் பழம் ஒருவருக்கு எப்படிப் போதுமாகும்?” என்று கேட்டார்லி நாங்கள் அதையும் இழந்தபோதுதான் அதன் மதிப்பை உணர்ந்தோம்” என்றார் கள்லி இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்தபோது (திமிங்கல வகை) மீன் ஒன்றைக் கடல் கரைஒதுங்கச் செய்திருந்தது. நாங்கள் அதிலிருந்து பதினெட்டு நாட்கள் விரும்பியவாறு உண்டோம்.107 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2983
- Book Index
- 192
Grades
- -