ஹதீஸ்கள்
#2982
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹவாஸின் போரில்) மக்களின் பயண உணவுகள் தீர்ந்துபோய் பஞ்சத்திற் குள்ளானார்கள்; ஆகவே, நபி (ஸல்) அவர்களிடம், தங்கள் ஒட்டகங்களை (உண்பதற்காக) அறுக்க அனுமதி கேட்டு வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் மக்க ளுக்கு அனுமதி அளித்தார்கள். (திரும்பும் போது) மக்களை உமர் (ரலி) அவர்கள் கண்டார்கள். மக்கள் உமர் (ரலி) அவர்களி டம் விவரத்தைத் தெரிவிக்கவே உமர் (ரலி) அவர்கள், ‘‘உங்கள் ஒட்டகங்களை அறுத்துவிட்டபிறகு (நீண்ட தூரம் நடந்தே சென்றால்) நீங்கள் உயிர் பிழைப்பது எப்படி?” என்று கேட்டார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்கள் ஒட்டகங்களை அறுத்துவிட்டபிறகு அவர்கள் (நடந்தே பயணம் சென்றால்) உயிர் பிழைப்பது எப்படி?” என்று கேட்டார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘தங்கள் பயண உணவுகளில் எஞ்சியிருப்பவற்றைக் கொண்டுவரும்படி மக்களிடையே அறிவிப்புச் செய்வீராக!” என்று கூறிவிட்டு, (அவையெல்லாம் கொண்டுவரப்பட்டவுடன்) அவற்றில் வளம் வேண்டிப் பிரார்த்தித்தார்கள். பிறகு மக்களைத் தம் பாத்திரங்களைக் கொண்டுவரும்படி அழைத்தார்கள். மக்கள் திருப்தியடையும்வரை (தம் கைகளால்) அள்ளிக்கொண்டார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவ னில்லை என்றும் நான் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் அளிக்கின்றேன்” என்று சொன்னார்கள்.106 அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2982
- Book Index
- 191
Grades
- -