ஹதீஸ்கள்
#2948
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அறப்போருக்கு(த் தலைமையேற்று)ச் செல்ல நாடினால் பெரும்பாலும் வேறெதற்கோ செல்வதைப் போன்று காட்டி அதை மறைப்பார்கள். தபூக் போர் (நேரம்) வந்தபோது அதற்காகக் கடும் வெயிலில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படையெடுத்துச் சென்றார்கள். தொலைதூரப் பயணத்தையும் வனப் பகுதியையும் அவர்கள் எதிர்நோக்கினார் கள். அதிக (எண்ணிக்கையிலான) எதிரி களைச் சந்திப்பதையும் எதிர்பார்த்தார்கள். தமது எதிர்பார்ப்பை முஸ்லிம்களுக்கு வெளிப்படையாகவே தெரிவித்துவிட்டார் கள். முஸ்லிம்கள் தம் பகைவர்களின் நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தங்களைத் தயார்படுத்திக்கொள்வதற்காக இப்படிச் செய்தார்கள். தாம் விரும்பும் இலக்கை முஸ்லிம்களுக்கு அறிவித்து விட்டார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2948
- Book Index
- 160
Grades
- -