ஹதீஸ்கள்
#2947
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஓர் அறப் போருக்கு (தலைமை தாங்கி)ச் செல்ல விரும்பினால் வேறெதற்கோ செல்வதைப் போன்று காட்டி அதை மறைக்காமல் இருக்கமாட்டார்கள். இதை, ‘‘தபூக் போரின்போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தாம் பின்தங்கியது தொடர்பாக என் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன்” என அவர்களின் புதல்வர் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். கஅப் (ரலி) அவர்க(ள் முதுமை அடைந்து கண்பார்வையிழந்துவிட்டபோது அவர்க)ளை, அவர்களுடைய மக்களி லேயே கைப்பிடித்து அழைத்துச் செல்பவ ராயிருந்தவர்தான் அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2947
- Book Index
- 159
Grades
- -