ஹதீஸ்கள்
#2935
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: யூதர்கள் (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (முகமன் கூறும் சாக்கில்) ‘‘அஸ்ஸாமு அலைக்க” (‘‘உங்கள்மீது மரணம் உண்டாகட்டும்”) என்று கூறினார்கள். நான் அந்த யூதர்களைச் சபித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உனக்கென்ன நேர்ந்தது? (ஏன் அவர்களைச் சபிக்கிறாய்?)” என்று கேட்டார்கள். நான், ‘‘அவர்கள் கூறியதைத் தாங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் (அவர்களுக்குப் பதிலளித்தபோது) அவர்களிடம்,யிவ அலைக்கும்லி (உங்கள்மீதும் அவ்வாறே உண்டாகட்டும்)› என்று கூறியதை நீ கேட்கவில்லையா?” என்று சொன்னார் கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2935
- Book Index
- 148
Grades
- -