ஹதீஸ்கள்
#2932
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (சுப்ஹ் தொழுகை யில்) குனூத் (எனும் சோதனைக் காலப் பிரார்த்தனை) ஓதும்போது, ‘‘இறைவா! சலமா பின் ஹாஷிமைக் காப்பாற்றுவாயாக! வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்றுவாயாக! இறைவா! அய்யாஷ் பின் அபீரபீஆ வைக் காப்பாற்றுவாயாக! இறைவா! இறை நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர் களைக் காப்பாற்றுவாயாக!77 இறைவா! யிமுளர்’ குலத்தார்மீது உனது பிடியை இறுக்குவாயாக!78 இறைவா! (உன் தூதர்) யூசுஃபின் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்ச ஆண்டுகளை ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். அத்தியாயம் :
حدثنا قبيصة، حدثنا سفيان، عن ابن ذكوان، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه قال كان النبي صلى الله عليه وسلم يدعو في القنوت " اللهم انج سلمة بن هشام، اللهم انج الوليد بن الوليد، اللهم انج عياش بن ابي ربيعة، اللهم انج المستضعفين من المومنين، اللهم اشدد وطاتك على مضر، اللهم سنين كسني يوسف
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2932
- Book Index
- 145
Grades
- -
