ஹதீஸ்கள்
#2913
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் அறப்போருக்குச் சென்றேன். (திரும்பி வரும் வேளையில்) முள்மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் நாங்கள் வந்து கொண்டிருந்தபோது மதிய ஓய்வு கொள் ளும் நேரம் வந்தது. மக்கள் அங்கிருந்த மரங்களிடையே பிரிந்து சென்று அவற்றின் நிழல்களில் (ஓய்வுக்காக) ஒதுங்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே தங்கினார்கள். அதில் தமது வாளைத் தொங்கவிட்டார்கள்; பிறகு தூங்கிவிட்டார் கள். பிறகு கண்விழித்தபோது நபியவர் களுக்கே தெரியாமல் அங்கே ஒரு மனிதர் நின்றுகொண்டிருந்தார். (அவரைப் பற்றி) நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மனிதர் என் வாளை உருவிக்கொண்டு, யிஉன்னை (என்னிடமிருந்து) காப்பவர் யார்?› என்று கேட்டார். நான், ‘அல்லாஹ்’ என்று பதிலளித்தேன். உடனே வாளை உறையில் போட்டுக்கொண்டார். அவர் இதோ அமர்ந்திருக்கிறார்” என்று சொன்னார்கள். அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரைத் தண்டிக்கவில்லை.65 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2913
- Book Index
- 126
Grades
- -