ஹதீஸ்கள்
#2889
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் போரின்போது நான் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுக்குப் பணிவிடை செய்துகொண்டே சென்றேன். நபி (ஸல்) அவர்கள் திரும்பி வந்தபோது அவர்களுக்கு உஹுத் மலை தென்பட்டதும், ‘‘இது எத்தகைய மலை யென்றால், இது நம்மை நேசிக்கின்றது; நாம் இதை நேசிக்கின்றோம்” என்று கூறினார்கள். பின்னர், மதீனாவை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்து, ‘‘இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்ததைப் போன்று, நான் (இந்த) இரு (கருங்கல்) மலைகளுக் கிடையேயுள்ள நிலப் பகுதியை (மதீனாவை) புனிதமானதாக அறிவிக்கி றேன். இறைவா! எங்கள் (அளவைகளான) ஸாவுகளிலும், யிமுத்’துகளிலும் எங்களுக்கு வளம் வழங்குவாயாக!” என்று பிரார்த்தித் தார்கள்.51 அத்தியாயம் :
حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا محمد بن جعفر، عن عمرو بن ابي عمرو، مولى المطلب بن حنطب، انه سمع انس بن مالك رضى الله عنه يقول خرجت مع رسول الله صلى الله عليه وسلم الى خيبر اخدمه، فلما قدم النبي صلى الله عليه وسلم راجعا، وبدا له احد قال " هذا جبل يحبنا ونحبه ". ثم اشار بيده الى المدينة قال اللهم اني احرم ما بين لابتيها كتحريم ابراهيم مكة " اللهم بارك لنا في صاعنا ومدنا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2889
- Book Index
- 104
Grades
- -
