ஹதீஸ்கள்
#2887
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: பொற்காசின் அடிமையும், வெள்ளிக் காசின் அடிமையும், கோடுபோட்ட சதுர கறுப்புத் துணியின் அடிமையும் அழிந் தான். அவனுக்கு (செல்வம்) கொடுக்கப் பட்டால் திருப்தியடைவான்; (செல்வம்) வழங்கப்படாவிட்டால் கோபமடைவான். அவன் இழப்புக்குரியவனாகட்டும்! அவன் அழியட்டும். அவனுக்கு முள் தைத்துவிட்டால் அதை எடுக்க ஆளில்லாமல் தவிக்கட்டும்! இறைவழியில் (போர் புரிந்திட) தமது குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, பரட்டைத் தலையுடன் இரு கால்களும் புழுதியடைந்தவராகச் செல்கின்ற அடியாருக்கு வாழ்த்துகள்! (அவர் எத்தகையவர் என்றால்) அவர் (படையின் முன்னணிக்) காவல் அணியில் நியமிக்கப்பட்டிருப்பாராயின் அதிலேயே (ஆட்சேபணை ஏதுமின்றி) இருப்பார்; பின்னணிப் படையில் நியமிக்கப்பட்டிருப்பாராயின் அதிலும் (எந்த முணுமுணுப்புமின்றி திருப்தியுடன்) இருப்பார். அவர் (யாரையும் சந்திக்க) அனுமதி கேட்டால் அவருக்கு அனுமதி தரப்படாது; அவர் பரிந்துரை செய்தால் அது (மக்களால்) ஏற்கப்படாது. (அந்த அளவுக்கு சாமானியராக, எளியவராகக் கருதப்படுவார்.) அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகி றேன்: (‘அழியட்டும்!› என்பதைக் குறிக்க) மூலத்தில் யிதஇஸ’ எனும் சொல் ஆளப்பட் டுள்ளது. இதற்கு, ‘அவனை அல்லாஹ் அழிக்கட்டும்!› என்பது பொருளாகும். (யிவாழ்த்து’ என்பதைக் குறிக்க) யிதூபா’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது யிதய்யிப்’ (நல்லது, தூயது) என்பதன் யிஃபுஅலா’ வாய்ப்பாட்டில் அமைந்ததாகும். யிதுய்பா’ என்பதே யிதூபா’ என யிவாவு’ உள்ளதாக மருவியுள்ளது. அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2887
- Book Index
- 102
Grades
- -