ஹதீஸ்கள்
#2884
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் தந்தையின் சகோதரர்) அபூஆமிர் (ரலி) அவர்களின் முழங்காலில் (அவ்த்தாஸ் போரில்) அம்பு எய்யப்பட்டது. நான் அவர்களிடம் சென்றேன். அவர்கள் (என்னிடம்), ‘‘இந்த அம்பைப் பிடுங்கிவிடு” என்று கூறினார்கள். நான் அதைப் பிடுங்கி விட்டேன். அதிலிருந்து நீர் கொட்டியது. பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அவர்களுக்கு நடந்ததைத் தெரிவித்தேன். (அதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! உபைத் அபூ ஆமிருக்கு மன்னிப்பளிப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.49 அத்தியாயம் :
حدثنا محمد بن العلاء، حدثنا ابو اسامة، عن بريد بن عبد الله، عن ابي بردة، عن ابي موسى رضى الله عنه قال رمي ابو عامر في ركبته، فانتهيت اليه قال انزع هذا السهم. فنزعته، فنزا منه الماء، فدخلت على النبي صلى الله عليه وسلم فاخبرته، فقال " اللهم اغفر لعبيد ابي عامر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2884
- Book Index
- 99
Grades
- -
