ஹதீஸ்கள்
#2881
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஸஅலபா பின் அபீமாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (பட்டால் அல்லது கம்பளியால் ஆன) கீழங்கிகளை மதீனா நகரப் பெண்களி டையே பங்கிட்டார்கள். அப்போது அதில் தரமானதொரு கீழங்கி எஞ்சியது. அதைக் கண்டு, அவர்களிடமிருந்த சிலர், ‘‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதை உங்களிடமிருக்கும் அல்லாஹ்வின் தூதருடைய (மகளின்) மகளுக்குக் கொடுங்கள்” என்று கூறினார்கள் லி அவர்கள் அலீ (ரலி) அவர்களின் மகளார் உம்மு குல்ஸூம் அவர்களைக் கருத்தில் கொண்டே இப்படிக் கூறினார்கள்லி அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘உம்மு சலீத் (ரலி) அவர்கள்தான் இதற்கு மிகவும் தகுதியானவர். உம்மு சலீத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்” என்று கூறிவிட்டு, ‘‘அவர் உஹுத் போரின்போது எங்களுக்காக (முஸ்லிம் வீரர்களுக்காகத் தண்ணீர்) தோல் பைகளைச் சுமந்து வருபவராக இருந்தார்” என்று கூறினார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: (யிசுமந்துவருபவர்’ என்பவரைக் குறிக்க மூலத்தில்) யிதஸ்ஃபிரு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு யிதைப்பவராக’ என்பது பொருளாகும். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2881
- Book Index
- 96
Grades
- -