ஹதீஸ்கள்
#2879
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் வெளியே (பயணம்) செல்ல நாடினால் தம் துணைவிய ரிடையே சீட்டுக் குலுக்கிப்போட்டு, எவரது பெயர் வருகிறதோ அவரை (மட்டும்) அழைத்துக்கொண்டு செல்வார்கள். இவ்வாறே, அவர்கள் (புரிந்த) ஓர் அறப் போருக்குச் சென்றபோது (அவர்களின் துணைவியராகிய) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது பெயர் வரவே, நான் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டேன். இது (பெண்கள் அந்நிய ஆண்களிட மிருந்து தம்மைத் திரையிட்டு மறைத்துக் கொள்ளவேண்டும் என்கிற) யிஹிஜாப்’ சட்டம் அருளப்பட்ட பின்னால் நடந் தது.48 இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. நால்வரில் ஒவ்வொருவரும் ஹதீஸில் ஒரு பகுதியைத் தமக்கு அறிவித்ததாக ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا حجاج بن منهال، حدثنا عبد الله بن عمر النميري، حدثنا يونس، قال سمعت الزهري، قال سمعت عروة بن الزبير، وسعيد بن المسيب، وعلقمة بن وقاص، وعبيد الله بن عبد الله، عن حديث، عايشة، كل حدثني طايفة، من الحديث قالت كان النبي صلى الله عليه وسلم اذا اراد ان يخرج اقرع بين نسايه، فايتهن يخرج سهمها خرج بها النبي صلى الله عليه وسلم، فاقرع بيننا في غزوة غزاها، فخرج فيها سهمي، فخرجت مع النبي صلى الله عليه وسلم بعد ما انزل الحجاب
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2879
- Book Index
- 94
Grades
- -
