ஹதீஸ்கள்
#2856
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் யிஉஃபைர்’ எனப்படும் கழுதை யின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், ‘‘முஆதே! அல்லாஹ்வுக்கு மக்கள்மீதுள்ள உரிமை என்ன; மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா?” என்று (என்னி டம்) கேட்டார்கள். நான், ‘‘அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்” என்று பதில் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென் றால், அவர்கள் அவனை(யே) வழிபட வேண்டும். அவனுக்கு எதனையும் (எவரையும்) இணையாக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணைகற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனை செய்யாமல் இருப்பதாகும்” என்று பதில் கூறினார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக் கட்டுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அவர்களுக்கு (இந்த நற் செய்தியை) அறிவிக்காதீர்கள். அவர்கள் இதையே நம்பி (நற்செயல்களில் ஈடு படாமல்) இருந்துவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثني اسحاق بن ابراهيم، سمع يحيى بن ادم، حدثنا ابو الاحوص، عن ابي اسحاق، عن عمرو بن ميمون، عن معاذ رضى الله عنه قال كنت ردف النبي صلى الله عليه وسلم على حمار يقال له عفير، فقال " يا معاذ، هل تدري حق الله على عباده وما حق العباد على الله ". قلت الله ورسوله اعلم. قال " فان حق الله على العباد ان يعبدوه ولا يشركوا به شييا، وحق العباد على الله ان لا يعذب من لا يشرك به شييا ". فقلت يا رسول الله، افلا ابشر به الناس قال " لا تبشرهم فيتكلوا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #2856
- Book Index
- 72
Grades
- -
